இந்திய விமானப் படையின் ஏர்மென் பணிக்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இவை குரூப் எக்ஸ் அல்லது ஒய் என்ற இரு பிரிவுகளாக உள்ளன. குரூப் எக்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு/+2 இவற்றில் ஒன்றில் குறைந்தது 50 சதவீதத்துக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பியல் மற்றும் கணிதத்துடன் இதை முடித்திருக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மெக்கானிக்கல்/எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி இவற்றில் ஒன்றில் இதை முடித்திருப்பது முக்கியம். இவை டெக்னிகல் டிரேட் பணியிடங்கள் என அழைக்கப்படுகின்றன.
குரூப் ஒய் பணிக்கும் 10ம் வகுப்பு/+2வில் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தது 50 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். இந்த 2 பணிகளுக்கு மே 17 முதல் 22 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். குறைந்தது 152.5 செ.மீ., உயரமும் அதற்கேற்ற எடையும் பெற்றிருப்பது முக்கியம். சிறப்பான கண் பார்வையும் பெற்றிருக்க வேண்டும். சென்னையில் ஏர்மென் பணிக்கான தேர்வு முறைகள் நடத்தப்படும். இது குறித்த செய்திகளை அறிய நமது நாளிதழின் இப் பகுதியை தவறாது பார்த்து வரவும். சில நாள் தயாரானால் போதும் என்றிருக்காமல் இப்போதிருந்தே உங்களது மகனை தேர்வுக்கும் உடற்தகுதிக்கும் தயாராகி வரச் சொல்லவும்.
குரூப் எக்ஸ் பணிக்கு இயற்பியல், கணிதம் பகுதிகளில் கேள்விகளைக் கொண்ட தேர்வு நடத்தப்படும். மேலும் ஆங்கிலம் மற்றும் ரீசனிங் பகுதிகளிலும் கேள்விகள் கேட்கப்படும். குரூப் ஒய் பணிக்கான தேர்வில் ரீசனிங் பகுதி இடம் பெறும். இதில் நியூமரிக்கல் சீரிஸ், டிஸ்டன்ஸ் டைரக்சன் டெஸ்ட், மேதமெடிக்கல் ஆபரேஷன்ஸ், நம்பர் ரேங்கிங், ஹியூமன் ரிலேஷன்ஸ், கோடிங் டிகோடிங், ஆட்மென் அவுட், மியூச்சுவல் ரிலேஷன்ஸ் பிராப்ளம், டாலஸ்ட் யங்கஸ்ட் ரிலேஷன்ஸ், டிக்சனரி வேர்ட்ஸ், நான்வெர்பல் ரீசனிங், நம்பர் கோடிங், நம்பர் பஸில் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இடம் பெறும்.
கணிதத்தில் ரேஷியோ புரோபோர்ஷன்ஸ், ஆவரேஜ், எல்.சி.எம்., எச்.சி.எப்., பிராபிட் அண்ட் லாஸ், டைம் டிஸ்டன்ஸ் அண்ட் ஸ்பீட், பர்சென்டேஜ், சிம்பிளிபிகேஷன் ஆப் நம்பர்ஸ், பிராக்சன்ஸ், ஏரியா ஆப் டிரையாங்கிள், ஸ்கொயர் அண்ட் ரெக்டாங்கிள், சர்பேஸ் ஏரியா, புராபபளிட்டி, சிம்பிள் டிரிக்னாமெட்ரி ஆகிய பகுதிகளில் கேள்விகள் இடம் பெறும்.
பொது அறிவில் பொது அறிவியல், சிவிக்ஸ், புவியியல், நடப்புச் செய்திகள், வரலாறு, பேசிக் கம்ப்யூட்டர் ஆபரேஷன்ஸ் ஆகியவற்றில் கேள்விகள் இடம்பெறும். இந்த 2 பணிகளுக்குமே பி.எப்.டி., எனப்படும் உடற்தகுதித் தேர்வும் பின்பு மருத்துவத் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.